07 டிசம்பர் 2011

இறையே.. நிறைவே..சரணம்


நான் எதைப் பற்றிய கவலையும்அற்றவன்

நான் எதற்கும் பயப்படாதவன்

நான் எந்நிலையிலும் தைரியமுள்ளவன்

நான் சதா உயர்வான சிந்தனையில் உள்ளவன்

நான் ஆளுமைக்காகவே அனுப்பட்டவன்

துணிவும் நிதானமும்

அறிவுக் கூர்மையும்

என் புதிய கூட்டணிகள்

சகல திடுக்கங்களிருந்தும் ஆபத்துக்களிருந்தும் சோதனைகளிருந்தும்

என் அறியாமைகளிருந்தும்,பலகீனத்திலிருந்தும் அதனால் ஏற்படும்

பின்விளைவுகளிருந்தும்,

அல்லாஹுவும், அருமை ரசூல் (ஸல்) அவர்களும் அவர்களின்

திருக்குடும்பத்தினர்களும் மற்றும் புனித ஆத்மாக்களும் எம்மை

பரிபூரணமாக சூழ்ந்து காத்து வருகிறார்கள்.

அந்த பேருண்மையின் பேரன்பின் அரவணைப்பால்

உயர்கிறேன்...

உயர்கிறேன்...

மேலும் உயர்வேன்... உயர்வேன்...

நான் மிகச்சிறப்பாக..

மிக மகிழ்வாக...

மிக உற்சாகமாக..

மிக மேன்மையாக..

மிக நிறைவாக..

இருக்கிறேன்.. என்றும் இருப்பேன்.



-ஜே.எம்.பாட்ஷா

இந்த இறைஞ்சுதல்களை 2002-லிருந்தே தினமும் காலையில் அலுவலகம் சென்ற உடன் பணிகளை ஆரம்பிப்பத்ற்கு முன் நபிகள் நாயகத்தின் புகழ் கூறும் சில முக்கிய குர்ஆன் சூராக்கள் ஸலவாத்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளோடு மன்ம் ஒன்றி தியானமாக சொல்லி வரும் இயல்பு கொண்டிருந்தேன். இது போன்ற சுய உசுப்பு சொற்றொடர்களால் நம்மை நாளும் புதுப்பித்தல் மிக அவசியம்!


கருத்துகள் இல்லை: