
நீ வள்ளுவம் பெற்ற தமிழின் சொத்து பாரதி..!
நீ வரலாறு கொண்ட தமிழரின் முக்கால தளபதி பாரதி..!
நீ வாழ்வையே கவியாக கண்டவன்
நீ வாழ்வையே கவியாக வாழ்ந்தவன்
நீ கவிதையிலேயே வாழ்ந்ததனால் மகாகவியானாய்
நீ எங்களுக்கு மட்டுமே கிடைத்த புதையல்
அதனால் தான் புதையல் எனச் சொல்லிக்கொண்டே கொண்டே
பாவிக்கப்படாது பூமிக்குள் புதைந்திருக்கும் காலப்பெட்டகம் ஆனாய்!
பாடப்புத்தங்களிலும்,
பட்டிமன்றங்களிலும்,
திரைப்பாடல்களிலும் அல்லாது என்று ஆவாய்
தமிழர்களின் உணர்வாய் நீ பாரதி..?
உன் உணர்வலைகள் எல்லோரையும் உலுக்குவது எப்போது..?
உன் சிந்தையின் சில துளியிலாவது எங்களவர் குளிப்பது என்றோ..?
நல்லதோர் வீணையே.. சுடர்மிகும் அறிவே..!
நானிலம் பயனுற கவிபாடியவனே..!
காக்கையையும் தன்னினமாக கண்டவனே..!
அச்சமற்று.. எதிர்த்தவரை துச்சமென்றவனே
நினது புகழ் வாழ்க!
நின் சிந்தை எங்களை ஆள்க!!!
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக