05 ஆகஸ்ட் 2014

முகநூல் நிலைத்தகவல் 8-5-2014

பல்திறன் கூடம் நீ!
பலபேர்க்கு பாடம் நீ!

சொற்திறன் வேடன் நீ!
சோற்விலா தேடன் நீ!

செந்தமிழ் நாடன் நீ!
செம்மொழிச் சீடன் நீ!


உண்மையிலேயே ராஜேந்தர் அற்புதமான மனிதர்.. கொஞ்சம் எமோசனல் கேரக்டர் அவ்வளவு தான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



உலகத்து ஆண்கள் அனைவரையும் ஞானிகளாக்க வேண்டும் என்ற உயர்ந்த நிலைப்பாட்டின் பின்னணியிலேயே இறைவன் ஒவ்வொருவருக்கும் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் மனைவியை தந்திருக்கிறான் போலும்...!

தத்துவம்: புரிந்தவன் ஞானியாகிறான்.. புரியாதவன் போனியாகிறான்.

அத்தனை சோதனிகளின் முடிவிலும் மிகைத்திருப்பது உன் கருணையன்றோ இறைவா!!!!!!!!!!!!! (..பயபக்தியோடு..)

ஏன்னா.. லெப்ட்..ரைட்டு..அப்பு.. டவுனுன்னு... ஏந்தப்பக்கமும் திரும்பமுடியாம.. வாழ்க்கையையே தியானமாக்கி புடம்போட்ட தங்கமா மாத்திடுறானே அது தான் அந்த இறைவனின் மகிமை.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இலாவகமாக செயல்படுகிறார்கள்
எல்லோரும் அவர்தம்
திருட்டுத்தனத்தையும்
இயலாமையையும்
மறைக்க

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பெருக்கு இல்லாத ஆடி! - போனில்
உருக்கத்தோடு சொன்னார் என் டாடி!
.
.
.

# இன்று ஆடிப்பெருக்காம்.. நாம் தான் "ஆடி.. பெருக்க" வேண்டும்.. கை விரல் நனைக்க சிறு சுனை அளவு கூட நீரில்லை எங்கும்.. நெடுகிலும் வற்றிய ஆறுகள்.. வற்றாத வேதனை!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எந்த மோதல்களும் முன்பே தீர்மானிக்கப்படுவதில்லை, அரசியல் மோதல்களைத் தவிர.

(மத மோதல்களும் அரசியலில் அடக்கம்)

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: