24 ஆகஸ்ட் 2014

எதிர்ப்பார்க்கப்பட்ட மொட்டு!



அந்தப்பூச்செடியில்
எதிர்பார்க்கப்பட்ட மொட்டு பூக்காதது
நல்லதா.. கெட்டதா என
தெரியவில்லை!

பூக்காதது பற்றி கொஞ்சம்
நெஞ்சில் கவலை இல்லாமலில்லை!
மொட்டு அரும்பியும்..
பூக்காமல் போவதெல்லாம்
நாம் நினைத்து நடந்ததல்ல..!

மொட்டைக் கண்டச்சனமே
மெட்டுப்பாட நெஞ்சம் தவறுவதில்லை!
சனநேரத்து அக்கனவில்
அத்தனை அலங்காரமும்.. மகிழ்வும்..
நெஞ்சத்திரையில் வந்து போயிருக்கும்.

ஆனாலும் பூ பூக்கவில்லை,
தவறிப்போனப் பின்பு
ஏங்கவும்மனம் தவறுவதில்லை!

வளந்த அச்செடியில்
எத்தனையோ மொட்டுக்கள் பூவாகியிருக்கிறது,
எதிர்ப்பார்க்கப்பட்ட மொட்டு
மலராதது குறித்து மனதில் 
விவாதம் வேண்டாம் சமாதானங்கள்.

செடியில் இன்னும் பல
மொட்டுக்கள் அரும்பும்..
அப்போது மலரும்
பலப்பூக்களால் நெஞ்சத்து தோட்டம்
கனவுகளால் நிரம்பும்!

இனி மொட்டுக்களை எல்லாம் பார்த்து
மலருமென்ற கனவு வேண்டாம்
என நெஞ்சத்திடம் கூறி இருக்கிறேன்!

இனி என்றும் 
பூத்துச் சிரிக்கும் 
பூக்களோடு மட்டும்.
கனவுகள் அல்ல,
நிஜம்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: