22 ஆகஸ்ட் 2014

சென்னை மற்றும் நான்


சென்னை

உன்னை
என்னை
ஆளாக்கியிருக்கிறது.

எனது பொருள் தேடலுக்கும்
ஆரம்பப்புள்ளி அது தான்.

இணையுடன் முதன்முதலாய்
இன்ப உலா இனிதே சென்று
இதய விழா கண்டதும் அங்கு தான்.

அறியா சிறுவயதில்
பெரியப்பாவோடு பேருந்தில் வந்து
பேரின்பம் பெற்றதெல்லாம் பெரும் சென்னையில் தான்.

வாழ்க்கையில் உயர வாவென அழைத்து
வாஞ்சையோடு விமானத்தில்
உட்கார வைத்து உயர்த்தியதும் உயர்ச் சென்னை தான்.

நெஞ்செல்லாம்நெகிழ வைக்கும்
பெற்றோரின் ஹஜ்ஜுப்பயணம்
உற்றாருடன் இச்சென்னையில் தான்.

வாழ்வின் திருப்பங்கள் தந்த நகரங்களில்
முதல் நகரம் முக்கிய நகரம்
சென்னை.. சென்னை.. சென்னையே தான்.

நன்றியுடன் மீண்டும் சொல்வேன்...

சென்னை
உன்னை
என்னை
ஆளாக்கியிருக்கிறது.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: