12 ஆகஸ்ட் 2014

ஈராக்கில் அட்டூழிய அரங்கேற்றம்

ஈராக்கில் மனிதாபிமானமே இல்லாமல் சிறுபான்மை மக்களான எஜீதிகள், கிருத்துவர்கள்,குர்துக்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் போன்ற இனத்தவர்களை ஈவிரக்கமே இல்லாமல் கொன்றும், புதைத்தும், விற்றும் இன்னபிற அநீதங்களையும் செய்யும் கொடிய குழுவினரை எனதளவில் வன்மையாக கண்டிக்கிறேன். 

இச்செயல் இஸ்லாத்திற்கும், நபிகள் நாயகத்தின் இனிய செயல் பாட்டிற்கும் முற்றும் எதிரானது மக்காவை வெற்றி பெற்று தாங்கள் ஆற்றிய இறுதி உரையிலும், பலமுறை தனது தோழர்கள் மத்தியிலும் ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் போது சிறுபான்மையினர் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, அவர்களது உரிமை, உடமை, உயிர் போன்றவற்றிற்கு முழுமுதலாக பொறுப்பேற்று பேணி நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் எண்ணத்தில் கூட தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று எண்ணிவிடக்கூடது என்று பல முறை அறிவுருத்திச் சென்றிருக்கிறார்கள். இது தான் இஸ்லாம். நபிகள் நாயகம் ஸல்லல்லஹு அலைஹிவசல்லம் அவரக்ள் கூறிய இதன் சாரத்தை அவர்களின் இறுதி உரை என்று பதியப்பெற்றிருக்கும் எந்த மொழி அல்லது எந்த வருட, எந்த நாட்டு நபிமொழிப் பதிப்பிலும் அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமிய பெயரில்.. இஸ்லாத்திற்கு சேவை செய்வதாக கூறி இஸ்லாத்திற்கு எதிராக.. மனிதாபிமானமே இல்லாமல் மனித உயிர்களை கொன்று குவிக்கு யாராக இருந்தாலும், எந்த குழுவாக இருந்தாலும் அவர்கள் வெறுக்கப்பட வேண்டியவரக்ள். அவர்களுக்கும் நபிகளாரின் வழிகாட்டலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களை இஸ்லாத்தின் பிரதிநிதிகளாக யாரும் தொடர்பு படுத்த வேண்டாம். சில இந்து நண்பர்கள் அவர்களையும் இஸ்த்தினையும் தொடர்பு படுத்தி குழப்பிக்கொள்கின்றனர், இஸ்லாமிய பெயரில்.. இஸ்லாத்திற்காக என்று அவர்கள் செய்வது ஆண்டவனுக்கே அடுக்காது.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: