23 ஆகஸ்ட் 2014

அண்ணாலாரை உவந்த ஆன்மா அபூதாலிப் நாயகம்

சமீபத்தில் எதார்த்தமாக ஒரு மார்க்க கேள்வி பதில் நூலை பார்க்க நேர்ந்தது..
அதில் ஒரு கேள்வி, நரகத்தில் குறைவாக வேதனை செய்யப்படும் நபர் யார் என்று... பரபரப்புடன் என் கண்கள் பதிலை தேடியது.. பதில் பார்த்து அதிர்ந்தேன்!!!!!!
அதில் எழுதப்பட்டிருந்த பெயர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை மிக நேசம் கொண்டு போற்றி வளர்த்திர்ட்ட மேலானவரின் பெயர்.. அண்ணல் தன் அன்னை, தந்தை, பாட்டனார் போன்ற ஆதரவினை பிரிந்து அனாதையாய் நின்றபோது தன் பேரன்பின் சிறகால் ஆரவணைத்து காத்தவரின் பெயர்... இஸ்லாமிய பிரச்சாரம் துணிந்து செய்ய ஆரம்பித்த நாட்களில் எட்டுத்திசையிலும் அண்ணலுக்கு எதிராக கிளம்பிய புழுதிப்புயல்களை தன் அசாத்திய அரண்கள் கொண்டு அற்புதமாய் காத்திட்ட கருணையின் பெயர்...அந்தப்பெயரை எப்படித்தான் மனம் வந்து இப்படியெல்லாம் பிரசுரிக்க இவர்களின் கள் நெஞ்சத்திற்கு மனம்வந்ததோ தெரியவில்லை.. ஆம் அந்தப்பெயர் அண்ணலின் ஆருயிர் சிரிய தந்தையார் அபூதாலிப் அவர்களின் பெயராகும்.
அண்ணலின் நேசம் ஒன்றே போதும் ஒருவன் இறை திருப்தியை பெற.. இன்று இந்த இஸ்லாம் நிலத்தில் நிலைப் பெற அவர்களும் ஒரு ஆணி வேர். நபிகள் நாயகத்தினை நயவஞ்ச சூழ்ச்சிகள் எதுவும் தீண்டாமல் தனது என்பது வயதிற்கு மேலேயும் காத்து நின்ற காவலர் அவரது உங்களையும் என்னையும் இன்னும் எவரையும் விட நபிகள் நாயகத்தினை அறிந்தவர்.. அவர் கொள்கையை அறிந்தவர்... அதனை விரும்பியவர் அதனால் தான் இத்தனையையும் செய்ய முடிந்தது. அவர்கள் வாயால் மொழிந்தால் ஏற்கிறேன் என மொழிந்தால் என்ன மொழிந்தவர் செய்வதையெல்லாம் தன் செயலால் செய்தால் என்ன.. இப்படி இருக்கையில் அவர்களைப் பற்றி பேச.. அல்லது முடிவெடுக்க நீ யார்? அந்த பிரச்சனை உனக்கு ஏன்.. நபிகளை நேசித்தவரை.. காத்தவரை.. சிறுவயதிலிருந்து உணவும், உறைவிடமும் கொடுத்து அன்பும்.. ஆதரவும்.. பாதுகாப்பும் அளித்த அண்ணலின் பேரன்பருக்கு இந்த கதி ஏற்பட அண்ணல் சம்மதிப்பார்களா... என்ன ஒரு அபத்தம்..
வேண்டாம் உங்கள் ஈனக் கொள்கை! அண்ணலோடு சம்பந்தப்பட்ட எல்லாமும் உயர்ந்தவையே.. சிறந்தவையே.. அவை ஒரு போதும் மோசம் போகாது. மேலும் சொல்கிறேன் கேள் உனது பார்வையிலுள்ள சொர்க்கமும் நரகமும் அவர்கள் போன்ற மேலானவர்களுக்கெல்லாம் ஒரு பெருட்டே அல்ல...சொர்க்கத்தின் அதிபதியின் பொருத்தமும் அவனின் திருத்தூதரின் பொருத்தமுமே அவர்களது இலக்கு. அவ்விருவரின் தூய பேருண்மை இந்நிலத்திலும் எல்லார் உள்ளத்திலும் விருட்சமாய் வேரூண்ட வேண்டும் என்பதே அவர்களது இலக்கு. மேலோர்களை மேலாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சிற்றறிவால் பெரிய சங்கதிகளுக்குள் நுழையக்கூட முயற்சிக்க வேண்டாம். அவைகளெல்லாம் ஒத்துவராது உங்களுக்கு.
எண்ணத்தை தூய்மைய்யாக்கி கொள்ளுங்கள்.. உள்ளத்தில் நல்லதை விதைத்து பழகுங்கள். அண்ணல் அருள் புரிவார்களாக... அவனும் அருள் புரியாவானாக.

வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: