18 மார்ச் 2012

பட்டமளிப்பு விழா வாழ்த்து



முதலானவனின் மூலத்தை அறிந்து
முஹம்மதரின் அடிமையென பறைந்து
முஹ்யித்தீனியத்தால் எஜமானாகி உயர்ந்து
மூடர்களின் அறிவுக்கண்ணைத் திறந்து
ஏகத்துவ மெய்ஞ்ஞான விளக்கேற்றிவைத்த
வலிமார்கள் வாழ்ந்து வழிகாட்டி கொண்டிருக்கிற வழுத்தூரிலே…!

ஆண்டவனின் அகமியங்களை
அவனின் படைப்புகள் யாவும்
ஏற்க மறுத்த சமயத்தில்
ஏந்தி வாங்கியது மானுடம்!

லவ்ஹுல் மஹ்ஃபூலில் பிரதி எடுக்கப்பட்டு
உலகத்திற்கு அனுப்பபப்பட்டதல்லவா இறைமறை!
ஹக்கின் புறத்திலிருந்து
ஹாத்தமுன் நபிக்கு வந்ததல்லவா அருள்மறை!

ஒவ்வொரு முறை வஹி வரும்போதும்
உத்தமநபியின் உடலே நடுக்குமாம்
சத்திய நபியின் முகமே சிவக்குமாம்

சஹாபாக்கள் கண்டுகொள்வார்களாம்
குர் ஆன் இறங்குகிறதென்று
நாயகத்திற்கே இப்படியா
நாயனின் தூதல்லவா.. அப்படித்தான் இருக்கும்!

அதையே தம் அகத்துள் – நம்
அன்பிற்குரிய மாணவர்கள் தாங்கி இருக்கிறார்கள்
எத்தனை சந்தோசம் தெரியுமா
எங்களின் தாண்டவமாடுகிரது – எனென்றால்
நீங்களும் சஃபாஅத் செய்ய தகுதியானவர்கள் ஆயிற்றே!

மகத்துத்துவமிக்க ஹாபிஸ்களே – எங்கள்
மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

இந்த கவிதையாகப்பட்டது 1997ல் வழுத்தூர் அல்-மதரஸத்துல் முஹம்மதியா தொடங்கி முதல் பட்டமளிப்பு விழா நடந்த போது வாழ்த்துக்கவிதையாக நான் எழுத பீர்பாய்.தீன் முஹம்மத் (ஷைகு பரீதுத்தீன்) மற்றும் எனது சார்பில் அச்சடிக்கப்பட்டு பகிரப்பட்டது.  இதன் பிரதி கண்டெடுத்தால் இங்கே இன்ஷா பதிக்கப்படலாம்.

ஜா.மு.பாட்ஷா

1 கருத்து:

Mohamed Shameer சொன்னது…

லவ்ஹுல் மஹ்ஃபூலில் பிரதி எடுக்கப்பட்டு
உலகத்திற்கு அனுப்பபப்பட்டதல்லவா இறைமறை!

Arumaiyana Varigal