09 ஏப்ரல் 2012

காதலின் அசோகப்போர்



ஆட்டுகுட்டி சண்டையானாலும்
அசோகப்போர் போல நினைத்து நீயும்,
அப்படி என்ன உனக்கு என்று நானும்
எத்தனை இருள் போர்த்திய இரவுகளில்…!

ஒத்தகருத்துடனும் ஒருமித்த மனதுடனும்
நாம் கடந்து வந்த நாட்களினூடே
எத்தனை இரவுகளுக்கு
அது இல்லாமல் போனது
நமக்கு எற்பட்ட ஊடல்களில்!

தேடல் கொண்ட இரவுகளில் எல்லாம்
கூடல் வாய்ப்பது இல்லை ஆனாலும்
நீயும் நானும்
அவரவர் தரப்பின் முறைப்பில்
பலமாய் இருந்த‌
தேடல் இல்லாத நேரம் தான் நமக்குள்
அததனை பெரிய ஊடலையும்
ஜடமாயாக்கி..
ஒரு நொடி வலிமையில்
மாய்த்து சாய்த்துவிடும்
அந்த சனப்பொழுதின் ஸ்பரிசம்.

மீண்டும் நாம்
தோழன் தோழியாய்
பாசம் பொழிந்து
அசோகப்போர் தொடங்குவோம்!


காலம் -2011

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: