09 ஏப்ரல் 2012

கேட்பாரின்றி!




மனிதனின் உள்ளே
ஓர் ஜீவன்
மறைந்திருக்கும்!

நேரமெல்லாம் ஓயாமல் அது..
கத்திக்கொண்டும்
பேசிக்கொண்டும்
ஆர்பரித்துக் கொண்டும்
அழுதுகொண்டும்
மகிழ்ந்து கொண்டும்
இசைந்து கொண்டுமே
இருக்கும்..!

யாருடைய ஜீவனும்
எப்போதும் அதன்
நாவசைப்பிலிருந்து
ஓய்வெடுப்பதே இல்லை.

ஆனாலும் அமைதியாக
அதை உணர்ந்து கொண்டும்
அதை அறிந்து கொண்டும்
உள்ளே ஓங்கும் அந்தக்குரலை
எல்லோரும் சட்டை செய்யாதே
சற்றே பயணிக்கின்றனர்!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: