19 ஏப்ரல் 2012

நானொன்றும் எழுதவில்லை




தேவி...
இதழோடு தேன் வழிய
இசைத்தேனே உன் பெயரை
முதலேதும் தெரியாமல்
மூழ்கிவிட்டேன் இன்பத்தில்..!
============================


உன் மலர் கூந்தல்
ஓர் மலையாக - அதில்
மல்லைகைப் பூ பால் அருவியாக
பார்த்தேன் தேவி காற்றில் ஆடயிலே!

==============================


இதயத்தில் புகுந்து
இப்படியெல்லாம் இம்சிப்பாய்
எனத்தெரிந்திருந்தால் - உன்
இதழுக்குள் எழும் வார்த்தைக்காக
இப்படி அழைந்திருக்க மாட்டேன்.

=============================

நானொன்றும் எழுதவில்லை
உன் கண்கள்
படித்த கவிதையை
என் கைகள் இன்று
எழுதியது அவ்வளவே!

=============================

உதட்டோரம் உதிர்த்து
உள்ளக்குடி சேர்ந்து
உலகை மறக்க வைத்து - என்
உயிரைக் குடித்ததடி
உன் மொழி!

=============================

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: