22 நவம்பர் 2011

பொய்த் தோல்..!



அன்னையின் கருவறை விடுத்து
அண்டம் விழுந்த நிகழ்வினிலிருந்தே
இரவுப்பகலாய் ஓடிடும்
பொழுதுகளின் ஓட்டத்தில் நிகழும்
ஒவ்வொரு செயல்களும் உண்டாக்கும்
மாய திரைகளில் சிக்குண்டு,

சுயம் எனக்கு மறக்கடிக்கப்பட்ட
சுத்தமில்லாத சூழல் நிலவும் தருணங்களில்
நான் 'நான்' என உச்சரிக்கும் போது
மூல இருப்பின் மூலத்திலிருந்தே ஒழிய‌
துல இருப்பிற்கு ஏதும் இல்லை என‌
முளையில் ஒளிந்து கொண்ட
ஒளி எனக்கு ஓதி ஒலித்துக் கொண்டே
இருப்பதன் இயல்பின் காரணத்தால்,

இப்பொழுதில் எல்லாம்
நான் என்பதினை குறித்த முன்வரைவு
மனக்கண்ணின் பின் திரைகளில்
ஓடிக் கொண்டே இருப்பதால்
கவனம் கொள்ள வேண்டிய கட்டாய சூழல்!

அனிச்சையாகவே என் நான்
'நான்' குறித்து சற்றே
நாட்டம் விடுத்து நிற்கிறது!

அதுவே முற்றுமானால்
முழுசுகம் தானே!

-ஜே.எம்.பாட்ஷா

கருத்துகள் இல்லை: