18 நவம்பர் 2011

புகழ்ந்தே பாடுவாய் நெஞ்சமே..!




பல்லவி:

காத்தமுன் அன்பியா ஆனவரை

கலிமாவின் கருவாய் மிளிர்பவரை

உத்தம தோழர்கள் உயிர்த் தலைவரை

உண்மையாய் திண்ணமாய் புகழ்ந்தே பாடுவாய்!


இணைப்பு:

நெஞ்சமே..! முஃமின் நெஞ்சமே..!!

நெஞ்சமே..! முஃமின் நெஞ்சமே..!!


சரணங்கள்:

தினுல் இஸ்லாம் நெறியை

தீந்தேனாய் தந்த நபியை – உயர்

வேதம் அளித்த அழகை

வேந்தர்க்கு வேந்தர் அருளை

மாந்தர்க்கு உரைத்து மகிழ்ந்தே பாடுவாய்!


தாஹா நபியை இரசூலை

தாயிபில் உதிரம் உதிர்த்தவரை – பெரும்

வேதனைப் பொருந்திய சாதனையை

பொறுமைக் கடலை பெருமான் இரசூலை

பெருமையாக நெகிழ்ந்தே பாடுவாய்!


ஆதி முதல் ஜோதியின்

அற்புத மணம் வீசுதே – இம்

மேதினி மேலே எங்கிலும்

மென்மை தென்றல் காற்றிலே

கண்மணி நாதரை நுண்ணறிவாளரை

விண்ணுக்கும் மேலே வியந்தே பாடுவாய்!


-ஜே.எம்.பாட்ஷா

எழுதியது 2001

கருத்துகள் இல்லை: