22 ஜனவரி 2012

நெஞ்சத்தவிப்பு





உன்னோடு
சேர்ந்து வாழும் - அந்த
சந்தன நாட்களை எண்ணி
நெஞ்சம் தவிக்கிறது.

உன்னோடு
இனிமை பொங்கும்
வாழ்வு நடத்த
நிதமும் ஏங்குகிறேன்

எனக்குள்
எத்தனை எத்தனையோ
இனம் புரியாத தவிப்புகளும்..,
இனம் தேடிடும் உணர்வுகளும்..,
ஏதோ ஓர்
அரவணைப்பையும்
தோழ்கொடுப்பையும் தேடி…!

உந்தன்
தேன்முக தரிசனமே - இன்றும்
என் மனத்திரையில்..!

வா…
என்னோடு வாழ..!

நீ தான்
என் எத்தனையோ
உணர்வுகளின் வடிகால் கண்மணி..!


ஜே.எம்.பாட்ஷா


(திருமண நிச்சயம் நடந்த பிறகு எழுதியது)

கருத்துகள் இல்லை: