22 ஜனவரி 2012

சூறாவளி..!



அமைதியான ஆகாயத்தில்
திடீர் சூறாவளி..!

சூரிய ஈர்ப்பில் வேறெதுவும்
அறியாது சுற்றிக்கொண்டிருக்கும்
கோள்களுக்கு கூட தடுமாற்றம்..!

சலனமில்லாத ஆழ்கடல் கூட
திடீர் வேகப்பேரலையால்
கலங்கி ஆர்பறித்தது..!

என் கண்களுக்குள்..
ஐயோ ..!
ஓர் காட்டுக்தீ..!

நெஞ்சத்தில் பேரதிர்ச்சி..!

சித்தம் பேதலித்து
சேதாரம் ஆகிவிட்டது..!

சிந்தனையே வேறெதுவும் இல்லை
சூழ்நிலைக்கூட சுத்தமாய் மறந்து விட்டது

வேறெங்கும் பார்வையில்லை..!

நுகர்வு நரம்புகள்..
புதிய வாசம் உணர்ந்து தேடியது..!

நரம்பு மண்டலங்களில்
மின்சார பேரதிர்வு..!

எங்கோ அதன் திசையில்
கால்கள் தானாக நடக்கிறது

இத்தனை பரபரப்புக்கும்
காரணம்..

பூகம்பம்


எதிரே அவள்..!

--ஜே.எம்.பாட்ஷா

2008ல் எழுதியது..

கருத்துகள் இல்லை: