16 ஜூலை 2016

மனிதகுல விரோதிகள்

Abu Haashima அண்ணனின் ஸ்டேடஸ்-ம், நான் இட்ட பின்னூட்டமும்
முஹம்மது என்று பெயருள்ள ஒருவன் ப்ரான்சில் தாக்குதல் நடத்தி பத்து குழந்தைகள் உட்பட ஏராளமானவர்களை கொன்றிருக்கிறான்.
இன்றைய பத்திரிகைகளில் " ஐஎஸ் தீவிரவாதி முஹம்மது என்பவன் ...."என்று செய்தி பிரசுரித்திருப்பதை படிக்கும்போதுஉண்மையிலேயே உண்மையிலேயே மனம் கொந்தளித்து கொந்தளித்து
வேதனித்துக் கொண்டிருக்கிறது.
முஹம்மது என்ற பெயர் வைத்துள்ள ஒரு உண்மை முஸ்லிம் இதுபோன்ற நீசத்தனமான காரியத்தை செய்திருக்க மாட்டான். அப்படிச் செய்தால் அவன் முஸ்லிமாகவே இருக்க மாட்டான். அவன் யாரென்பது நமக்குத் தெரியாது. அவன் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.
அல்லாஹ் அவனை ...
அவனைச் சார்ந்தவர்களை மண்ணோடு மண்ணாக
நாசமடையச் செய்வானாக.
முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் காலத்திலும்
பல போர்கள் நடந்தன.
போருக்கு முன்னர் நபிகளார் விதித்த நிபந்தனைகள் ....
* போரில் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள்
கொல்லப்படக்கூடாது.
* பெண்களுக்கு எந்த இழிவும் ஏற்படக்கூடாது.
* விளை நிலங்களை அழிக்கக் கூடாது.
* கால்நடைகளை கொல்லக் கூடாது.
இப்படித்தான் அவர்கள் காலத்திலும்
அவர்களின் வபாத்துக்குப் பிறகு நடந்த போர்களிலும் போரின் விதிகள் கடைபிடிக்கப்பட்டன.
ஆனால் ...முஹம்மது என்ற பெயரை வைத்துக் கொண்டு
முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைக்கு மாற்றமாக அப்பாவிகளை படுகொலை செய்பவன் எப்படி முஸ்லிமாக இருப்பான் ?
நிச்சயம் அவன் முஸ்லிமில்லை.மனிதனும் இல்லை.
இப்படிப்பட்ட சண்டாளர்கள் மனித குலத்தின் விரோதிகள்.இவர்களை அடையாளம் இல்லாமல் அழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் !
குறிப்பாக ...
புனிதமிக்க நபிகளாரின் பெயரை வைத்துக்கொண்டு
பாவச் செயல் புரியும் இவனைப் போன்றவர்களை மன்னிக்கவே கூடாது.
************
ஆமாம் நான் வழிமொழிகிறேன், இப்போது ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான இஸ்லாமியர்கள்
முன்பும் குடியுறிமை பெற்றிருக்கிறார்கள், இப்போதும் குடியேறிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு நான் அறிந்த வகையில் 15 ஆண்டுகளின் அனுபவத்தில் எத்தனையோ பேர் ஜெர்மனில் நாட்டில் எனது குடியுரிமை, கனடாவில் எனது குடியுரிமை, பிரிட்டனில் எனது குடியுரிமை என இருக்கிறார்கள். எல்லாம் பலஸ்தீன், ஈராக், சிரியா மற்றும் அரபிய, ஆப்பிரிக்க நாட்டினர். இது போன்ற ஈனச்செயல்கள் அந்த நாட்டினரை இஸ்லாமியர்கள் குறித்த வேறு பார்வைக்கு கொண்டு சென்றுவிடும். ஏர்கனவே ட்ரம்ப் போன்றவர்கள் குதித்துக்கொண்டிருக்கிறார்கள், சென்றமுறை பிரான்ஸில் ஏற்பட்ட ஒரு குண்டுவெடிப்பில் ப்ரான்ஸே ஸ்தம்பித்தது, இஸ்லாமியர்களுக்கு கெடுபிடி அதிகமானது, இனி அகதிகள் வேண்டாம் என எல்லோரும் போராட்டம் நடத்தினர்..இதற்கிடையில் இப்படி நட்டந்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை.
இந்த ஐஸ் காரனை பற்றிய மர்மங்கள் விலகவே மாட்டீங்குது... ரெண்டு நாட்டையே அழிக்கிறான், கொடூரமா எல்லா எழவையும் செய்றான், கேட்டா இஸ்லாமிய கலிபா ஆட்சியை உருவாக்க போறானாம், இதில் எள்ளவும் உண்மையில்லை, எல்லா புனிதர்களின் அடக்கத்தலங்களை இடித்து, பெண்களை கற்பழித்து சிறுபான்மை எஜீதிகளை கூறு கூறாக வெட்டி, சந்தையில் வைத்து விற்று மலை முகட்டில் ஓட்டிச்சென்று லட்சக்கணக்கான எஜீதி இன மக்களை (அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை, தென் இந்திய பாரம்பரிய ஹிந்துக்கள் போன்றவர்கள், இவர்கள் முருகனை வணங்குவது போல அவர்கள் மயிலை வணங்குபவர்கள்) ஓட்டிச்சென்று வெயிலில் பட்டினி போட்டு சாகடித்து, பெரிய மார்பகம் இருக்கும் இளம்பெண்களை ஆசை தீர கற்பழித்து பின்பு அறுத்து குழந்தைகளை கணக்கின்றி கொன்று, சிரியாவில் இதுவரை 7லட்சம் பேரை இப்படி கொலை செய்து,
ஈராக்கில் கணக்கின்றி கொன்று........
இதெல்லாம் என்ன வென்றே சொல்ல முடியல.. யாரால் நடக்கிறது....???????????????
இவர்கள் முஸ்லிமாக இருந்தாலும்... யாராக இருந்தாலும்,
அல்லது வேறு யாரோவின் சூழ்ச்சியாக இருந்தாலும்
மனித குல விரோதிகள்..
மனித குல விரோதிகள்..
மனித குல விரோதிகள்.. அவ்வளவு தான்.

-ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

வேகநரி சொன்னது…

மனித குல விரோதிகள் - சரியான கண்டனம்.