27 ஜூலை 2011

பசிக்கு இரக்கம் வருமா..?



வெட்டும் வெயிலில்

வெட்ட வெளியில்

எட்டாம் மாடிக்கு

சித்தாள் கிழவி

சட்டி சுமந்து செல்கிறாள்..!


அறுபது வயதிற்கு மேலிருக்கும்

அந்த கிழச்சித்தாளுக்கு,


எடுபிடி வேலை செய்ய

எடுத்து வந்துவிட்டாள்

சும்மாடு தன்னை,

சும்மா விடுமா வயிறு..!


சற்று நேரத்திற்கெல்லாம்

களைப்படைந்த அக்கிழவி

இப்படியா வெயில் அடிக்கும்

'எப்ப்ப்ப்பாடியோ… ஏ..ஆயா'

அவளுக்கவளே சொல்லிவள்,

நிழல் பார்த்தமர்ந்தாள்!


இடுப்பில் கட்டிவைத்திருந்த

குட்டிச்சுருக்குப்பை எடுத்து

கைவிரல் நுழைத்து

கடைந்துத்தொட்டு கடைசியில்

புகையிலைப் பையெடுத்து

வாயில் மென்றதக்கி…


சின்னச்சுண்ணாம்பை

சிற்றுருண்டையாக்கி

வாய்க்குள் அதையும் வீசி,


காம்பினை கிள்ளி

வெற்றிலையை

கசக்கி..மடக்கிப்..போட்டு


மெல்ல எழுந்தாள்..

மென்று கொண்டே எழுந்தாள்


பசித்தால் இரவு உறக்கம் வருமா..? - இல்லை

பசிக்குத்தான் இரக்கம் வருமா..?



-ஜே.எம்.பாட்ஷா


-இன்னும் புரியும்

கருத்துகள் இல்லை: