17 ஜூலை 2011

அனுபவம் பற்றி சிறுவன் நான்..

14 ஆண்டுகளுக்கு முன்...






என்னை பொறுத்த மட்டில்

வெண்ணெய் எடுக்கும் மத்துபோல

என்னையே கடைந்தெடுக்க இப்படி

கவிகள் புனைவது வழக்கம்!


படைத்தவன் படைத்த மூளை

பகுத்தறிவை தொடும் வேலை - என்னில்

பகுத்துப் பார்க்க பழகிக்கொண்டது,

தொகுத்துப் பார்த்தால் ஐந்தாண்டு இருக்கும்!


வகுத்து கழித்தது போக

பெருக்கி கூட்ட வெண்டியதெல்லாம் –தூய்மையாக

உருக்கி எடுத்துத் பின் தொடுத்தலையும்

பகுக்கும் மூளை பழக வேண்டியவை.


ஏட்டால் வருமறிவு எண்ணிக்கையில் பல

பாட்டால் பெறுமறிவு எண்ணிக்கையில் பல

பார்வை கேள்வியால் பெறுமறிவுகளும் இப்படித்தான்

இவைகள் பற்றியெல்லாம்

இங்கு கூற நான் விளையவில்லை,


நடைமுறையில் பெறும் அறிவு – என்ற

நல்லதொரு அரும் அறிவைத்தான்

அனுபவம் என்பார்கள்.


அடைந்து சொன்னதெல்லாம்

அனுபவம் தான். – சில சமயம்

ஏட்டுக்கல்விகள் எடுபடாதபோது

நேற்று பெற்ற பாடம் தான்

தோற்றுவிக்கும் புதுவழி தன்னை,


பெரியவர்கள் சொன்னதும் அதைத்தான்

பேரறிஞர்கள் சொன்னதும் அப்படித்தான், - இதனால்

ஊரறிய சொல்வது என்னவென்றால்

அனுபவம் போன்ற ஆசிரியன் இல்லை என்றே!


ஊறும் பிள்ளைகள் கூட

ஓடும் பூச்சியைப் பிடிக்க,

கடித்தபின்னர்

கற்றுகொள்வது தான் அனுபவப் பாடம்


தாயின் மார்பறையில்

அமுதம் அருந்திய நிகழ்வுகளெல்லாம்,

அறிவு முளைக்கும் முன்னே என்பதால்

மறந்து போன அனுபவந்தான்,


சில கனங்கள்,

தொல்லை கொடுத்து அழுததனால்

பல்லைக் கடித்துக் கொண்டு கோபம் வர

அடித்து தீர்த்ததனால்… தாய்

தேம்பி அழுத அனுபவங்கள்

தேடினாலும் வருமா..



-ஜே.எம்.பாட்ஷா

17-10-1997 10.27 இரவு,


இன்னும் புரியும்...

கருத்துகள் இல்லை: